Female
Amma vedhanai kaatchiyae
Vizhi kaanavillaiyoo
Sodhanai yen amma
Amirthavarshini..amirthavarshini
Female
Amudhae odi vaa
Amudhae odi vaa
Vaan amudhae odi vaa
Amaidhi soozha ulagam vaazha arul mazhai
Amudhae odi vaa
Female
Mannan needhiyil maaruvadhalae
Vaanum vanjanai seidhidalaamoo
Mannan needhiyil maaruvadhalae
Vaanum vanjanai seidhidalaamoo
Enna tholaiyaa ezhai maandhargal
Yengi vaadudhal podhadho
Female
Amudhae odi vaa
Vaan amudhae odi vaa
Female
Nallavar vaazha peidhidum mazhaiyaal
Nallavar vaazha peidhidum mazhaiyaal
Naadum vaazhndhidum enbathum poiyoo
Nellum valamum niraiya seivadhu
Neer illamal veredhu
Female
Uzhavor adaintha thuyaraal varunthi
Venmegam maeni karukkave
Mazhai neer sumandha mugilae kavindhu
Adi vaanamengum nerukkavae
Female
Vizhipola minnal thirakkavae
Idiyosai vinnil muzhakkave
Sezhikkavae puvikkellam
Mazhai muthin thuli sindha magizhvodu
Female
Amudhae odi vaa
Amudhae odi vaa
Vaan amudhae odi vaa
Odi vaa ..odi vaa.. odi vaa
பெண்
அம்மா வேதனைக் காட்சியே
விழிக் காணவில்லையோ
சோதனை ஏனம்மா
அமிர்தவர்ஷிணி.......அமிர்தவர்ஷிணி.......
பெண்
அமுதே ஓடிவா
அமுதே ஓடிவா
வானமுதே ஓடி வா
அமைதி சூழ உலகம் வாழ அருள்மழை
அமுதே ஓடிவா
பெண்
மன்னன் நீதியில் மாறுவதாலே
வானும் வஞ்சனை செய்திடலாமோ
மன்னன் நீதியில் மாறுவதாலே
வானும் வஞ்சனை செய்திடலாமோ
எண்ணத் தொலையா ஏழை மாந்தர்கள்
ஏங்கி வாடுதல் போதாதோ.......
பெண்
அமுதே ஓடிவா
வானமுதே ஓடி வா
பெண்
நல்லவர் வாழப் பெய்திடும் மழையால்
நல்லவர் வாழப் பெய்திடும் மழையால்
நாடும் வாழ்ந்திடும் என்பதும் பொய்யோ
நெல்லும் வளமும் நிறையச் செய்வது
நீரில்லாமல் வேறேது........
பெண்
உழவோரடைந்த துயரால் வருந்தி
வெண்மேகம் மேனி கருக்கவே
மழைநீர் சுமந்த முகிலே கவிந்து
அடிவானமெங்கும் நெருக்கவே
பெண்
விழிபோல மின்னல் திறக்கவே
இடியோசை விண்ணில் முழக்கவே
செழிக்கவே புவிக்கெல்லாம்
மழை முத்தின் துளி சிந்த மகிழ்வோடு
பெண்
அமுதே ஓடிவா
அமுதே ஓடிவா
வானமுதே ஓடி வா
ஓடி வா ஓடி வா ஓடி வா